search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை
    X

    திருச்செந்தூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

    திருச்செந்தூர் அருகே மகன் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள என்.முத்தையாபுரம் மேல தெருவை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது52). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் 2-வது மகன் கணேஷ் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். 

    அதில் இருந்து இசக்கியம்மாள் மன வேதனையில் இருந்தார். இந்த நிலையில் நேற்று இசக்கியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி திருச்செந்தூர் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுக்கபப்ட்டது. 

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இசக்கியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×