search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசி அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலி
    X

    வந்தவாசி அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த புதுமாப்பிள்ளை பலி

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் சிவா(26) இவருக்கும் மணிமேகலை என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. சிவாவிற்கு சொந்தமான விவசாய நிலம் பாதிரி ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ளது. பாம்பு செட் அருகில் உள்ள தென்னை மரத்தில் ஏறி நேற்று சிவா இளநீர் பறித்துள்ளார். அப்போது சிவா கைப்பிடித்து இருந்த தென்னை மட்டை பாரம் தாக்காமல் முறிந்தது. இதனால் சிவா கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிவாவை வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதுதொடர்பாக அவரது உறவினர் வேலு வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌ திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×