என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல பரிசீலனை - ரெயில்வே அதிகாரி
பொன்னேரி:
சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்கத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் குலஷேத்ரா அதிகாரிகளுடன் தனி ரெயிலில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பொன்னேரி ரெயில் நிலையத்தில் கட்டப்பட்டிருந்த ரெயில்வே துறை அலுவலகங்கள், ரெயில்வே ஊழியர்கள் குடியிருப்பு ஆகியவற்றை திறந்து வைத்தார். பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு அலுவலகம், நிலைய மேலாளர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது குலஷேத்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கம் 4 வழிப் பாதையாக மாற்ற அனுமதியளிக்கப்படவில்லை. இது குறித்து ஆய்வு நடத்தப்படும். இந்த மார்க்கத்தில் செல்லும் விரைவு ரெயில்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படும். ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
ரெயில் நிலையங்களில் உள்ள கழிப்பறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணச்சீட்டு அலுவலகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதால் சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்