search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையத்தில் தங்கம்- வெளிநாட்டு பணம் பறிமுதல்
    X

    சென்னை விமான நிலையத்தில் தங்கம்- வெளிநாட்டு பணம் பறிமுதல்

    சென்னை விமான நிலையத்தில் 3 பயணிகளிடம் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஆலந்தூர்:

    இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த ரஷீத்கான் (28) என்ற பயணியிடம் சோதனை செய்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரது சூட்கேசில் சோதனை நடத்தினார்கள். அதில் 2 கிலோ 50 கிராம் தங்கநகைகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த முகமது என்ற பயணியின் நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவர் உள்ளாடையில் 150 கிராம் தங்க கட்டியை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.

    அதே விமானம் அதிகாலை 4.15 மணிக்கு மீண்டும் இலங்கை புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்யவந்த சென்னையை சேர்ந்த ஆஷிப்கான் (38) என்ற பயணியிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    அப்போது அவரிடம் அமெரிக்க டாலர்கள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.7½ லட்சம் ஆகும். அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×