search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுகுளத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- கிராம மக்கள் அச்சம்
    X

    முதுகுளத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி- கிராம மக்கள் அச்சம்

    முதுகுளத்தூர் அருகே தட்டானேந்தலில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியால், தண்ணீரை சேகரிக்க முடியாமல் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    முதுகுளத்தூர்:

    போக்குவரத்து வசதிகள் இல்லாத தட்டானேந்தலில் 120-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராம மக்களின் தண்ணீர் தேவைக்காக,  2011 ல், 10 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியுடன், தெருக்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் பைப்லைன் இணைப்புகள் அமைக்கபட்டது. 

    தரமின்றி அமைக்கபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 2014 ல், மராமத்து செய்யபட்டது. இடிந்து விழும் நிலையிலுள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டியில் மராமத்து பணிகள் மேற்கொள்ள முடியாததால், இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் சில மாதங்களாக தொட்டியில் தண்ணீர் சேகரிக்க முடியாமல், தண்ணீர் சப்ளை நிறுத்தபட்டுள்ளது. மராமத்து பணிகள் மேற்கொண்டு, 4  ஆண்டுகளுக்குள் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியிலுள்ள கான்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழுகிறது. 
    மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே உள்ள குளியல் தொட்டியில் சேகரிக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தும் கிராம மக்கள், இடிந்து விழும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி அருகே செல்ல அச்சம் கொண்டுள்ளனர். இதனால் கிராம மக்கள், குளியல் தொட்டி அருகே செல்ல முடியாமல், புழக்கத்திற்கான தண்ணீரை கூட விலை கொடுத்து வாங்கும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×