search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரிமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை
    X

    காரிமங்கலம் அருகே வாலிபர் மர்ம மரணம்- போலீசார் விசாரணை

    காரிமங்கலம் அருகே வீட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள காளப்பள அள்ளி புதூரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் கோவிந்தராஜ் (வயது30). கார்மெண்ட்ஸ் நடத்தி வந்த இவருக்கு கலையரசி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. கோவிந்தராஜ் குடும்பத்துடன் அதே கிராமத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கோவிந்தராஜ் தனது தந்தை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். 

    இது குறித்து காரிமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்த கோவிந்தராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து கோவிந்தராஜ் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×