search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உசிலம்பட்டியில் சாக்கு குடோனில் திடீர் தீ விபத்து
    X

    உசிலம்பட்டியில் சாக்கு குடோனில் திடீர் தீ விபத்து

    சாக்கு குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின.
    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர் கருப்புக்கோவில் பகுதியில் தனியார் வணிக வளாகத்தில் சாக்கு குடோன் வைத்துள்ளார். அங்கு பிளாஸ்டிக் சாக்குகள் தயாரித்து பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால் ஏராளமான சாக்குகள் எப்போதும் குடோனில் வைக்கப்பட்டு இருக்கும்.

    நேற்று இரவு ஊழியர்கள் வழக்கம் போல் குடோனை அடைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு குடோனில் இருந்து கரும் புகை வெளிவந்துள்ளது. இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உசிலம்பட்டி தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் குடோனில் புகை, தீயாக மாறி கொழுந்து விட்டு எரிந்தது.

    தீயணைப்பு துறையினர் சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குடோனில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடோனில் 60 ஆயிரம் சாக்குகள் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அவை தீயில் எரிந்து நாசமானதாகவும் போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்து நாசமான சாக்குகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் என்று தெரிகிறது.
    Next Story
    ×