search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகமலை புதுக்கோட்டையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு
    X

    நாகமலை புதுக்கோட்டையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

    நாகமலை புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து வழிப் பறி ஆசாமிகள் தப்பி விட்டனர்.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 40). இவரது மனைவி சுதா. 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.

    இது குறித்து ஜெயபிரகாஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×