search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது
    X

    மதுரை அருகே தொழிலாளி கொலையில் வாலிபர் கைது

    தொழிலாளி கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் இந்தக்கொலை நடந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    பேரையூர்:

    சோழவந்தான் அருகே உள்ள காடுபட்டியைச் சேர்ந்தவர் அழகுசாமி. இவரது மகன் அழகுபாண்டி (வயது 35). இவர் கப்பலூரில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இதனால் மனைவி மற்றும் மகனுடன் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரில் வசித்து வந்தார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி அவரை விட்டுச் சென்றார். இதனால் மது பழக்கத்திற்கு அடிமையான அழகுபாண்டி சரியாக வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் தோப்பூர் கண்மாய்க்குள் குப்பை கிடங்கு அருகே அழகுபாண்டி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

    இதுபற்றி ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். அப்போது அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அந்தப்பகுதியில் மது பாட்டில்களும் கிடந்தன.

    இதனால் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதினர். கொலை செய்யப்பட்ட அழகுபாண்டி உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் தோப்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அழகுபாண்டி (32) என்பவர் சம்பவத்தன்று கொலையான அழகுபாண்டியுடன் மது அருந்தியது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரித்தபோது, மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் அழகுபாண்டி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் தோப்பூர் அழகுபாண்டியை கைது செய்தனர்.

    Next Story
    ×