search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பாக்கு தயாரித்தவர் கைது
    X

    மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பாக்கு தயாரித்தவர் கைது

    மீஞ்சூர் அருகே வீட்டில் போதைப்பாக்கு தயாரித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பாக்கு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மீஞ்சூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அத்திப்பட்டு சென்றார். விசாரணையில் முருகேசன் என்பவர் வீட்டில் இருந்து வியாபாரிகள் போதைப் பாக்கு பாக்கெட்டுகளை வாங்கிக் செல்வது தெரிய வந்தது.

    அதை தொடர்ந்து முருகேசன் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது, அங்கு போதைபாக்கு தயாரித்து பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது.

    விற்பனைக்கு தயாராக இருந்த போதைப்பாக்கு பாக்கெட்டுகள், அதை தயாரிப்பதற்காக வைக்கப் பட்டிருந்த மூலப் பொருட்கள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். முருகேசன் கைது செய்யப்பட்டார்.

    போதைப்பாக்கு தயாரிக்கும் பொருட்களை எங்கு வாங்கினார்? குட்கா சப்ளை செய்யும் கும்பலுடன் முருகேசனுக்கு தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×