என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோரனஅள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் கடும் அவதி
Byமாலை மலர்12 March 2019 6:23 PM GMT (Updated: 12 March 2019 6:23 PM GMT)
மோரனஅள்ளியில் குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்டது மோரனஅள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 750 குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால், ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இதுவரை தண்ணீர் வழங்கவில்லை.
இதற்காக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டும், மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். மாமரங்களுக்கும் டிராக்டர் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி ஊராட்சிக்கு உட்பட்டது மோரனஅள்ளி கிராமம். இந்த கிராமத்தில் 750 குடியிருப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை கிணறு மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
போதிய மழை இல்லாத காரணத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால், ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குறைந்த அளவே தண்ணீர் ஏற்றப்படுகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படும் தண்ணீர் ஒரு மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடம் தண்ணீர் தான் கிடைக்கிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு இதுவரை தண்ணீர் வழங்கவில்லை.
இதற்காக மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட அலுவலரிடம் முறையிட்டும், மனு அளித்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகிறோம். மாமரங்களுக்கும் டிராக்டர் மூலம் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X