search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை
    X

    பழனியில் வியாபாரி வீட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

    பழனி அருகே வியாபாரி வீட்டின் கதவை உடைத்து நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    பழனி:

    பழனி அருகில் உள்ள கோதைமங்கலத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது49). இவர் பழனி மார்க்கெட்டில் கடை வைத்துள்ளார். மேலும் தனது வீட்டிற்கு பின்புறம் பஞ்சாமிர்தம் தயாரிப்புக்கு பயன்படும் டப்பாக்கள் குடோன் வைத்துள்ளார்.

    நேற்று அடிவாரம் பகுதியில் தனது உறவினர் இறந்து விட்டதால் அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் மெயின்கேட்டை கடந்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் வீட்டிற்கு வந்த ஜெயக்குமார் கொள்ளை நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு முக்கிய தடயங்கள் பதிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×