search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை
    X

    உடையார்பாளையம் அருகே விஷம் குடித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை

    உடையார்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் அருகே தத்தனூர்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன் மகள் தீபா(வயது 18). இவர் தத்தனூர் பொட்டகொல்லை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்து வருகின்றது. தீபா தேர்வுக்கு படித்த கேள்விபதில் அனைத்தும் மறந்துவிடுவதாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனையில் இருந்த தீபா நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு மயக்க நிலையில் கிடந்தார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுசேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×