search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவை
    X

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவை

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் அதிவேக இன்டர்நெட் சேவையை முதன்மை பொது மேலாளர் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் மூலம் ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிக வேகம் கொண்ட இன்டர் நெட் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சிவகங்கையில் உள்ள தொலைபேசி நிலையத்தில் இந்த சேவையை முதன்மை பொதுமேலாளர் ராஜம் தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் இதுவரை காப்பர் கம்பிகளின் மூலம் இன்டர்நெட் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆப்டிகல் பைபர் கேபிள் மூலம் அதிக வேகம் கொண்ட இன்டர் நெட் இணைப்பு வழங்கப்படுகிறது. தனியார் கேபிள் ஆபரேட்டர் மூலம் இந்த இணைப்புகள் வீடுகளுக்கு வழங்கப்படும்.

    இதன் மூலம் தொலைபேசி, டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவைகளுக்கு இணைப்பு பெறலாம். இந்த சேவையை பெற விரும்புபவர்கள் சிவகங்கையில் உள்ள தொலைபேசி நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் அதிவேக இணைப்பு பெறுபவர்களுக்கு ஒரு ஆண்டிற்கான வாடகையை மொத்தமாக செலுத்தும் போது 10 மாத வாடகையை செலுத்தினால் போதும். 2 மாத வாடகை தள்ளுபடியாகும். இந்த இணைப்பு கேட்பவர்களுக்கு அமைப்பு கட்டணம் கிடையாது. இந்த சேவையை எத்தனை பேர் பெற்றாலும், அனைவருக்கும் இணைப்பின் வேகம் குறையாமல் கிடைக்கும்.

    தற்போது வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் பேச வாட்ஸ்-அப் அல்லது ஐ.எம்.ஓ. என்ற இணைப்பை பயன்படுத்தி பேசுகின்றனர். சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்-ஆப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தடை உள்ள நாடுகளில் இருந்து பேச முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு உதவிட பி.எஸ்.என்.எல். நிறுவனம் விங்ஸ் வாய்ஸ் கால் என்ற ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியை ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இந்த செயலியை பயன்படுத்த வருடத்திற்கு ரூ.1099 கட்டணமாக செலுத்த வேண்டும். இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த செயலி மூலம் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் எளிதாக பேசலாம். மாவட்டத்தில் வசிக்கும் ஏராளமானவர்கள் வெளிநாடுகளில் வேலையில் உள்ளனர். அவர்கள் குறைந்த கட்டணத்தில் உறவினர்களுடன் பேச இந்த செயலி மிக பயனுள்ளதாக இருக்கும். இதில் சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள தொலைபேசி நிலையங்களில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் துணை பொது மேலாளர் ராஜேந்திரன், கோட்டபொறியாளர் யுவராஜ், உதவி பொது மேலாளர் பாண்டியன், துனை கோட்ட பொறியாளர் சரஸ்வதி ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை முதன்மை பொது மேலாளர் தொடங்கி வைத்தார்.
    Next Story
    ×