என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே வீடு புகுந்து சாமி சிலைகள் திருடிய 3 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்11 March 2019 11:39 AM GMT (Updated: 11 March 2019 11:39 AM GMT)
கபிஸ்தலம் அருகே வீடு புகுந்து ஐம்பொன் சிலை என நினைத்து சாமி சிலைகளை திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 50) இவர் தன் வீட்டில் காளி சிலை, காயத்ரி சிலை, புவனேஸ்வரி சிலை, ஆகிய மூன்று பித்தளை சிலைகளை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இதனை கவனித்து வந்த மூன்று நபர்கள் ஐம்பொன் சிலை என நினைத்து கடந்த 8-ந்தேதி அவர் வீட்டிற்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி 3 பேரையும் வீட்டிற்குள் ரவிச்சந்திரன் அனுமதித்துள்ளார். உள்ளே புகுந்த அவர்கள் ரவிச்சந்திரனை தாக்கி அறையில் வைத்து பூட்டி விட்டு சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சம்பத்குமார், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர். அப்போது தஞ்சாவூரில் சுற்றித்திரிந்த 3 பேரையும் பிடித்து 3 சிலைகளை மீட்டனர்.
அவர்கள் 3 பேரும் துவாக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளிவேல் மகன் கார்த்திக் (26), வடக்கூர் வடக்கு தெரு முருகேசன் மகன் இன்பநாதன் (29) என்பதும் தஞ்சாவூர் அண்ணாநகரை சேர்ந்த கதிரவன் வினோத் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் பாலக்கரை பகுதியில் வசிப்பவர் ரவிச்சந்திரன் (வயது 50) இவர் தன் வீட்டில் காளி சிலை, காயத்ரி சிலை, புவனேஸ்வரி சிலை, ஆகிய மூன்று பித்தளை சிலைகளை வைத்து பூஜை செய்து வந்துள்ளார். இதனை கவனித்து வந்த மூன்று நபர்கள் ஐம்பொன் சிலை என நினைத்து கடந்த 8-ந்தேதி அவர் வீட்டிற்கு வந்து பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதனை நம்பி 3 பேரையும் வீட்டிற்குள் ரவிச்சந்திரன் அனுமதித்துள்ளார். உள்ளே புகுந்த அவர்கள் ரவிச்சந்திரனை தாக்கி அறையில் வைத்து பூட்டி விட்டு சிலைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நாகரத்தினம், குற்றப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் குணசேகரன், சம்பத்குமார், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை செய்தனர். அப்போது தஞ்சாவூரில் சுற்றித்திரிந்த 3 பேரையும் பிடித்து 3 சிலைகளை மீட்டனர்.
அவர்கள் 3 பேரும் துவாக்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த காளிவேல் மகன் கார்த்திக் (26), வடக்கூர் வடக்கு தெரு முருகேசன் மகன் இன்பநாதன் (29) என்பதும் தஞ்சாவூர் அண்ணாநகரை சேர்ந்த கதிரவன் வினோத் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X