search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கையை காதலித்த வாலிபர் மீது தாக்குதல் - அண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்கு
    X

    தங்கையை காதலித்த வாலிபர் மீது தாக்குதல் - அண்ணன் உள்பட 2 பேர் மீது வழக்கு

    கோவை அருகே தங்கையை காதலித்த வாலிபர் மீது தாக்குதல் நடத்திய அண்ணன் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவை:

    கோவை வடவள்ளி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் நவீன்குமார் (வயது 24). அதே பகுதியில் பேனர் கடை நடத்தி வருகிறார். இவரும் ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்தனர். 

    சம்பவத்தன்று காதலியை மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டருகே கொண்டு வந்து நவீன்குமார் இறக்கி விட்டார். இதனை பெண்ணின் அண்ணன் மற்றும் அவரது நண்பர் பார்த்து விட்டனர். அதில் ஆத்திரமடைந்த 2 பேரும் சேர்ந்து நவீன்குமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். 

    இதனையடுத்து நவீன்குமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×