என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தம்பி திருமணத்துக்கு வந்த அண்ணன் காரில் கடத்தல் - வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பியதில் மோசடி செய்தவர்
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மன்னைநகர் காந்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் செல்வகுமார் (வயது 35).
இவர் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் பணியில் இருந்து வந்தார். இதற்காக அவர் அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று வருவது வழக்கம். மேலும் இவர் பலரிடம் பணம் பெற்று சிலரிடம் மோசடி செய்ததாக தெரிகிறது.
இதனால் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள், செல்வகுமாரை தேடி வந்தனர். ஆனால் அவர் கடந்த 6 மாதமாக தலை மறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று செல்வகுமாரின் தம்பி மணிகண்டனுக்கு மன்னார்குடியில் திருமணம் நடைபெற்றது.
இதில் செல்வகுமார் கலந்து கொள்வதற்காக மன்னார் குடிக்கு வந்தார். பின்னர் வீட்டில் இருந்து கடைவீதிக்கு அவர் நடந்து சென்றார்.
அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல், திடீரென செல்வகுமாரை அரிவாளர் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கடத்தி சென்றனர்.
பட்டப்பகலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மன்னார்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் டி. எஸ்.பி. கார்த்தி உத்தரவின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் செல்வகுமாரை கடத்திய கும்பல், அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் என்று தெரிய வந்தது. இதனால் கடத்தல் கும்பல் பற்றி போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் சிசிடிவி காமிரா காட்சியின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்