search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்- மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காமராஜ் பேச்சு
    X

    அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்- மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் காமராஜ் பேச்சு

    அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேசினார்.
    திருவாரூர்:

    பாராளுமன்ற தேர்தல் குறித்த அ.தி.மு.க. திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜீவானந்தம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அசோகன், பாப்பா சுப்ரமணியன், அ.தி.மு.க. மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி, சண்முகசுந்தர், ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், பாஸ்கர், சிங்காரவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்திட வேண்டும். அதுபோல் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க .வேட்பாளரை அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றிபெற செய்திட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. 

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் மெகா கூட்டணி அமைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×