search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாப்பேட்டை அருகே கார்கள் மோதல்- டிரைவர் பலி
    X

    லாலாப்பேட்டை அருகே கார்கள் மோதல்- டிரைவர் பலி

    லாலாப்பேட்டை அருகே கார்கள் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாலாப்பேட்டை:

    திருச்சி நெ.1 டோல்கேட் பிச்சாண்டார்கோவிலை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60), கார் டிரைவர். இவர் நேற்றிரவு காரில் திருச்சி- கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    லாலாப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டினை இழந்தது. இதில் எதிரே அடுத்தடுத்து வந்த 2 கார்கள் மீது பத்மநாபன் சென்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த பத்மநாபன் உடலைமீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×