search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெய்வேலி அருகே சிறுமியை மிரட்டி ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது
    X

    நெய்வேலி அருகே சிறுமியை மிரட்டி ஆபாச படம் எடுத்த வாலிபர் கைது

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே சிறுமியை மிரட்டி ஆபாச படம் எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.
    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியை அடுத்த ஊ.மங்கலம் எலுமிச்சை காலனியை சேர்ந்தவர் அபிமன்யூ (வயது 20). இவரது நண்பர் அம்பேத்கார் (21).

    இவர்கள் 2 பேரும் அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி செல்போனில் ஆபாசமாக படம் பிடித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். உடனே சிறுமியின் தாய் ஊ.மங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் அபிமன்யூ, அம்பேத்கார் ஆகிய 2 பேர் மீதும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து அபிமன்யூவை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அம்பேத்காரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

    Next Story
    ×