என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் 1,071 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
Byமாலை மலர்6 March 2019 6:07 PM GMT (Updated: 6 March 2019 6:07 PM GMT)
மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி 1,071 பேருக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பிரம்மதேசம்:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்காணம் பஸ் நிலையம் அருகே நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கினார். விழாவுக்கு வந்த அனைவரையும் நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாண்டுரங்கன், மரக்காணம் கூட்டுறவு சங்க தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜியா அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, 1,071 பேருக்கு வேட்டி, சேலை, பாத்திம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.
விழாவில் மாவட்ட மீனவரணி நிர்வாகி ஜெயராமன், கீழ்எடையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஆதிபகவான் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாளையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மரக்காணம் பஸ் நிலையம் அருகே நடந்தது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் ரவிவர்மன் தலைமை தாங்கினார். விழாவுக்கு வந்த அனைவரையும் நகர செயலாளர் கணேசன் வரவேற்றார். முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாண்டுரங்கன், மரக்காணம் கூட்டுறவு சங்க தலைவர் கனகராஜ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் விஜியா அர்ச்சுனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஜெயலலிதாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு, 1,071 பேருக்கு வேட்டி, சேலை, பாத்திம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நலத்திட்ட உதவியாக வழங்கினார்.
விழாவில் மாவட்ட மீனவரணி நிர்வாகி ஜெயராமன், கீழ்எடையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஆதிபகவான் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X