search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
    X

    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    காவேரிப்பட்டணம் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் காவேரிப்பட்டணம் தென்பெண்னை ஆற்றங்கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் சிலர், பணம் வைத்து சூதாடிகொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்த பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ்(44), ஜோலார்பேட்டை காளியப்பன் (70), கால்வேஅள்ளி முனியப்பன்(35), காவேரிப்பட்டணம் வேல்(35), என்பதும் இவர்கள் பணம் வைத்து சூதாடியதும் தெரிய வந்தது.

    இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பணம் ரூ 10 ஆயிரம் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×