search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்கள் கைது
    X

    புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்கள் கைது

    புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பூர்:

    புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி, செல்போன் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.

    போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்களுடைய பெயர் வாசுதேவன், ஆகாஷ் என்பதும், பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களுடைய கூட்டாளி அஜித்துடன் சேர்த்து 3 பேரும் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.

    அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள், அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடை பெறுகிறது.

    Next Story
    ×