என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்கள் கைது
பெரம்பூர்:
புளியந்தோப்பு பகுதியில் வழிப்பறி, செல்போன் பறிப்பு, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று இரவு புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.
போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்களுடைய பெயர் வாசுதேவன், ஆகாஷ் என்பதும், பல திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களுடைய கூட்டாளி அஜித்துடன் சேர்த்து 3 பேரும் வழிப்பறி, திருட்டுகளில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர்.
அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், 6 செல்போன்கள், அரிவாள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடை பெறுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்