search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே விவசாயி தற்கொலை
    X

    தஞ்சை அருகே விவசாயி தற்கொலை

    தஞ்சை அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கொல்லங்கரை மேலஅரிஜன தெருவை சேர்ந்தவர் உத்திராபதி (வயது 58). விவசாயி, இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

    இதனால் உத்திராபதி வாழ்க்கையில் விரக்தியடைந்தார். மனமுடைந்த அவர் வீட்டின் பின்புறம் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து  குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் பற்றி தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உத்திராபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×