என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருச்சியில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
கே.கே.நகர்:
திருச்சி கே.கே.நகர் சண்முகாநகரை சேர்ந்தவர் சண்முகம், மத்திய பிரதேசத்தில் ரெயில்வே பாதுகாப்புபடை வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 52).இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இவர்களின் மகன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகாநகரில் உள்ள வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே மகனும் தற்கொலை செய்ததால் மகாலட்சுமி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். இதற்கிடையே மகள் வித்யாவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் திருமணம் செய்து கொடுத்தனர். இதனால் தனிமையில் இருந்த மகாலட்சுமிக்கு மேலும் மன உளைச்சல் அதிகரித்துள்ளது. சம்பவத்தன்று மகன் தற்கொலை செய்த அறைக்கு சென்று மகாலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து கே.கே.நகர் போலீசில் அவரது மகள் வித்யா புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மகாலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குஅனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்