என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜேடர்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தையல் தொழிலாளி கைது
Byமாலை மலர்3 March 2019 12:33 PM GMT
ஜேடர்பாளையம் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்திய தையல் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே குறும்பலமாகாதேவியை அடுத்த நாயக்கனூரை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஈரோடு அசோக் நகரை சேர்ந்த ரமேஷ் (25) என்ற தையல் தொழிலாளி, நாயக்கனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். அப்போது அந்த மாணவிக்கும், ரமேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
கடந்த 28-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பெற்றோர் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தனர். மாலை வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போன மாணவியை ஜேடர்பாளையம் போலீசார் ஈரோடு பகுதியில் மீட்டனர். அவரை கடத்தி சென்றதாக ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X