search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வந்தவாசியில் ரூ. 1.50 லட்சம் குட்கா, புகையிலை பறிமுதல் - வியாபாரிகள் 3 பேர் கைது
    X

    வந்தவாசியில் ரூ. 1.50 லட்சம் குட்கா, புகையிலை பறிமுதல் - வியாபாரிகள் 3 பேர் கைது

    வந்தவாசியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் சீதாராமன் நாயுடு தெருவில் உள்ள ஒரு மொத்த விற்பனைக் கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக டிஎஸ்பி அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையில் வந்தவாசி தெற்கு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் வரதராஜன் ,திருமால், ரமேஷ் ஆகியோர் கொண்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அப்போது தப்பியோட முயன்ற கடை உரிமையாளர்கள் நைனாராம் (25) சீத்தாராம் (23) ஊழியர் சிவராஜ் (21) ஆகிய மூவரையும் கைது செய்து. வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    மாஜிஸ்திரேட் நிலவரசன் 15நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து மூவரையும் வந்தவாசி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×