search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்பத்துடன் கருத்து வேறுபாடு: தீக்குளித்து பெண் தற்கொலை
    X

    குடும்பத்துடன் கருத்து வேறுபாடு: தீக்குளித்து பெண் தற்கொலை

    குடும்பத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பெண் ஊழியர் தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை மேலூர் அருகேயுள்ள நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த சாம்பமூர்த்தி மகள் மலர்விழி (வயது23). இவர் வெள்ளரிப்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் மலர் விழிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மலர்விழி சம்பவத்தன்று காலை வீட்டில் தீக்குளித்தார்.

    உடல் கருகிய அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மலர்விழி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் கொட்டாம்பட்டி அருகிலுள்ள வெள்ளிணிப்பட்டியைச் சேர்ந்த கணபதி மகள் பிரபாவதி (19). இவர் தெக்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்த நிலையில் பிரபாவதி சமீபத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்தவர் வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

    உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பிரபாவதி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×