search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் அருகே விவசாயி மீது தாக்குதல்
    X

    திருவள்ளூர் அருகே விவசாயி மீது தாக்குதல்

    திருவள்ளூர் அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த சிறுவானூர் கண்டிகை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் சந்திரபாபு விவசாயி.

    இன்று காலை அவர் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச காரில் சென்றார். காரை நிறுத்திவிட்டு இறங்கி சென்றபோது 5 பேர் கும்பல் திடீரென சந்திரபாபுவை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.

    மேலும் அங்கு நிறுத்தி இருந்த சந்திரபாபுவின் காருக்கும் தீ வைத்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காரில் பிடித்த தீயை அணைத்தனர்.

    எனினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது. காயம் அடைந்த சந்திரபாபுவுக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    சந்திரபாபுவுக்கு நிலம் தொடர்பாக சிலருடன் தகராறு உள்ளது. இது தொடர்பாக வழக்கும் நடந்து வருகிறது. எனவே நிலத் தகராறில் இந்த தாக்குதல் நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று புல்லரம் பாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×