என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அமைந்தகரையில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
போரூர்:
அமைந்தகரை ஷெனாய் நகர் செங்கல்வராயன் தெருவைச் சேர்ந்தவர் சாமிநாதன். அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரண்யா. கடந்த 24-ந்தேதி சரண்யா தனது குழந்தைகளுடன் வீட்டை பூட்டிவிட்டு சீர்காழியில் உள்ள தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று அதிகாலை திரும்பி வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த கேமரா, லேப்டாப், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அமைந்தகரை போலீசில் சரண்யா புகார் அளித்தார். போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் வசந்தன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் கொள்ளையில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் உருவம் பதிவாகி இருந்தது.
இதனை வைத்து கொள்ளையில் ஈடுபட்டது வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரகு, டிபி சத்திரத்தை சேர்ந்த தினேஷ், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வினோத் குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்