search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பு
    X

    அரியலூரில் அரசு பள்ளி சுற்றுச்சுவர் உடைப்பு

    அரியலூர் அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    அரியலூர்:

    அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தை ஒட்டி கோட்டாட்சியர் அலுவலகம், போலீஸ் நிலையம், கிளை சிறைச்சாலை, நகராட்சி அலுவலகம் ஆகியவை உள்ளன. மைதானத்தில் உள்ள வகுப்பறைகளில் 10-ம், பிளஸ்-2 வகுப்புக்கான அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது.

    நாளை (வெள்ளிக்கிழமை) பிளஸ்-2-வுக்கு பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் மைதானத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் உடைத்துள்ளனர். தற்போது அந்த பாதை வழியாக மாணவர்கள் சென்று வருகின்றனர்.

    இதனால் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு, அதன் வழியாக காப்பி அடிப்பதற்காக ‘பிட்’ கொடுப்பதற்கும், சமூக விரோதிகள் அதன் வழியாக விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. இதே போல் கிளை சிறைச்சாலையின் சுவரையும் உடைக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குவதால், அதற்குள் உடைந்த சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×