search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் டாக்டர் உறவினர் வீட்டில் கொள்ளை
    X

    மதுரையில் டாக்டர் உறவினர் வீட்டில் கொள்ளை

    மதுரையில் டாக்டர் உறவினர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை நத்தம் சாலை பொறியாளர் நகரைச் சேர்ந்தவர் டாக்டர் கமீல். இவரது மாமியார் வீடு, அண்ணாநகர் ராயல் கார்டன் பகுதியில் உள்ளது.

    சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு டாக்டர் கமீல் வீட்டுக்கு மாமியார் வந்தார். இதனை பயன்படுத்தி யாரோ பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

    இந்த நிலையில் கமீலின் மாமியார் வீடு திரும்பியபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் இருந்த ஒரு பவுன் மோதிரம், ஒரு கேமிரா, 2 செல்போன்கள் திருட்டு போயிருப்பதாக அண்ணாநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மேலமடை வித்தகர் சந்து பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி ஜெய லட்சுமி (69). இவர் ஒத்தவீடு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஜெயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதிச்சியம் நடுத்தெருவைச் சேர்ந்த திலீப்குமார் (56) கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வந்த முனியாண்டி (42) சிவகங்கை மாவட்டம், முத்தனேந்தலைச் சேர்ந்த ரவுடி காட்டான் ஆறுமுகம் (32) ஆகியோர் கத்திமுனையில் சிகரெட் பண்டல்களை பறித்துச் சென்றதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முனியாண்டி மற்றும் காட்டான் ஆறுமுகம் கைது செய்யப்பட்டனர்.
    Next Story
    ×