search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விடமிருந்து நாட்டை மீட்க வேண்டும் - முக ஸ்டாலின்
    X

    பாரதிய ஜனதா, அ.தி.மு.க.விடமிருந்து நாட்டை மீட்க வேண்டும் - முக ஸ்டாலின்

    மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்க அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    கோவை:

    கோவை கொடிசியாவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது-

    எனது தந்தை கம்யூனிஸ்ட் கொள்கையில் ஆர்வம் கொண்டு எனக்கோ அன்றைய தினத்தில் இறந்த ரஷிய அதிபரின் பேரான ஸ்டாலின் என்ற பெயர் வைத்து உள்ளார்.

    இப்பெயரால் எனக்கு பள்ளியில் இடம் தர மறுத்து நிர்வாகம் அறிவுறுத்தியது.பெரியாரை கலைஞர் சந்திக்காவிட்டால் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்திருப்பார்.மா. சிங்கார வேலுவிற்கு 1925- ல் கம்யூனிஸ்டு கட்சி கொடி ஏற்ற வாய்ப்பு கிடைத்தது. ஒரு கட்டத்தில் ரஷிய அதிபர் ஸ்டாலினை பெரியார் சந்தித்து இருந்தால் தி.மு.க. என்ற இயக்கம் வந்திருக்காது.

    அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்ற ஆட்சி கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி. மக்களுக்கு பயன் தராத ஆட்சி எடப்பாடி, மோடி ஆட்சி. ரபேல் ஊழலில் லஞ்சம் இல்லை என எதிர் கட்சிக்கு பிரதமர் இதுவரை பதில் தர இல்லை. 5 விமான நிலையங்கள் பராமரிப்பு செய்ய அதானி குடும்பத்திற்கு ஒதுக்கியது ஊழல் இல்லையா?

    இந்த ஆட்சி தொடர்ந்தால் பல அனிதாக்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டி இருக்கும். தற்போது இருப்பது எம்.ஜி.ஆர். ஆட்சி அல்ல.

    பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் ஒரே இடத்தில் உள்ளது. இதற்காக ஒரே நாடு என்ற கோசத்தை முன்னிலைபடுத்தி வருகின்றனர். பல நேரங்களில் பல வீரர்கள் உயிரிழந்தனர். இதனை மூடி மறைக்க பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் முயல்கிறார். இந்த ஆட்சி தொடர்ந்தால் வேலை வாய்ப்பு பறிபோகும். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நாட்டை விற்று கொண்டிருக்கும் மத்திய பாரதிய ஜனதா ஆட்சியிடமிருந்தும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்த அ.தி.மு.க. அரசிடமிருந்தும் நாட்டையும், மக்களையும் மீட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மார்க்சிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-

    2 ஆயிரம் ரூபாய் கொடுக்கும் மத்திய அரசு 15 லட்சத்தை தருவதாக அறிவித்து ஏன் இது நாள் வரை தரவில்லை. தமிழகத்தில் தாமரை ஒரு போதும் மலராது. தமிழிசை கூறுவது போல ஒரு போதும் மலராது. இந்தியா முழுவதும் தாமரை கருகி கொண்டு உள்ளது. 21 சட்டமன்ற தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி அரசு வீட்டிற்கு செல்லும். எந்த முகத்தோடு எடப்பாடிக்கு ராமதாஸ் வாங்கு கேட்பார். எடப்பாடி பா.ம.க.வினருக்கு அல்வா கொடுத்து உள்ளார். ஓபிஎஸ் வழக்கு தீர்ப்பு வரும்போது இந்த ஆட்சி கவிழ்ந்து விடும். அமித்ஷா அண்ட புளுகை அரங்கேற்றி வருகிறார். அனைத்து மக்கள் நலன்களை காக்க உருவான அணி இந்த அணி. 40 மக்களவை தொகுதியிலும், 21 சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.

    ஒரு யுத்தம் மூண்டு விட்ட பிரமையை சித்தரித்து கொண்டிருக்கின்றனர். எல்லையை காக்கும் இந்திய வீரர்களை எங்கள் மனதில் பூஜிக்கிறோம். நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தா? மோடி ஒரு பாசிஸ்ட் என குற்றம்சாட்டுகிறேன் , அவரிடம் நேராகவே கேட்பேன்.

    முசோலினி ,ஹிட்லர் போல மோடி பேசுகிறார். கம்யூனிஸ்ட் வளர்ந்து வருவதை பொறுக்காமல் பெர்லின் பாராளுமன்ற கட்டிடத்தை ஹிட்லரே எரித்து விட்டு கம்யூனிஸ்ட் மீது குற்றம்சாட்டினர். இதே போலவே முசோலினியும் செய்தார் தான் நினைத்ததை சாதிக்க எதை வேண்டுமானாலும் செய்ய துணிபவர் தான் பாசிஸ்ட். 6 சர்வதேச விமான நிலையங்கள் அதானிக்கு 50 ஆண்டுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியதாவது-

    இந்தியா மதவெறி சக்திகளிடமும் ,கார்ப்பரேட் முதலாளிகளிடம் அடகு வைக்கப்படுகிறது. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருந்தால் இப்போது வரை 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும் . 15 லட்சம் ரூபாயின் மதிப்பு 6ஆயிரம் ரூபாயாக குறைந்து விட்டது. தமிழகத்தில் கொத்தடிமை ஆட்சி என்பதால் கொத்தடிமை கூட்டணியாக அமைந்திருக்கின்றது. எதிர்கால சந்ததிக்கு வாழ்வா? சாவா ? ஜனநாயகம் இருக்க வேண்டுமா? இல்லையா ? என்பதற்கான தேர்தல். இப்போது ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு பயங்கரவாதத்திற்கு எதிராக கொந்தளிப்பு. இதை மோடிக்கு ஆதரவாக மாற்ற முயல்கின்றனர் இதனால் தேர்தலை தள்ளிப்போடுவார்களோ என்ற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டு இருக்கின்றது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விடுதலை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது-



    நாட்டையும், தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இது கொள்கை சார்ந்த கூட்டணி. தொலைநோக்கு பார்வையில் உருவான கூட்டணி. ஸ்டாலினை முதல்வராக முன்னிலைபடுத்தி 40 இடங்களிலும் வெற்றி பெற கூடிய கூட்டணி. சனாதன சக்திகளை விரட்டியடிக்க இந்த மாநாட்டில் தீர்மானம் நிறை வேற்றியிருப்பது வரவேற்கதக்கது. சாதி மத வெறி கும்பல்களிடையே இந்த ஆட்சி பிடி கொண்டுள்ளது. தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையினர் இந்த ஆட்சியில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மகாத்மா காந்தியின் படத்தை பொது இடத்தில் வைத்து துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளனர். இந்திய அரசியலைப்பு சட்டத்தை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தூக்கி எறிவர். ஒரே மதம். ஒரே மொழி, என்ற ஒற்றை கோட்பாடு கொண்டு எதிர் கால திட்டத்தில் செயல்படுகிறது. போர் நடக்கும் சூழல் உருவாகி உள்ளதால் தேர்தல் தள்ளி போகலாம் என்ற செய்தி வருகிறது. தேசத்தையும், தமிழகத்தையும் காப்பதற்காக இங்கு ஒன்று பட்டு உள்ளோம். மக்களிடையே பகையை உருவாக்க முயற்சி நடக்கிறது. கார்ப்பரேட் முன்னேற்றத்திற்கு ஆதரவாக இந்த ஆட்சி உள்ளது. எதிர் கட்சி கேள்விக்கு மோடியிடம் பதில் இல்லை. அயல் நாட்டு பயணங்களில் கார்ப்பரேட் நிர்வாகிகள் உடன் சென்றனர். 2000 ரூபாய் விவசாயிகள் வங்கியில் செலுத்த மோடி அரசு முனைப்புடன் உள்ளது. அதனை தொடர்ந்து எடப்பாடி அரசு நலிந்த தொழிலாளர்கள் கணக்கில் 2000 செலுத்தப்படுகிறது. மோடி அரசை காப்பி அடிக்கும் அரசாக உள்ளது. பா.ம.க.இந்த கூட்டணிக்கு வராததால் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளது. சாதி வெறி, மத வெறி அப்புறப்படுத்த வேண்டும். சமூக நீதியை காப்பாற்றுவதை தவிர வேற நாதியில்லை. ஆகவே நாங்கள் அனைவரும் கை கோர்த்து நிற்கிறோம். இந்திய தேசத்தை காப்பாற்ற மோடி ஆட்சியை அப்புறப்படுத்துவோம். மாநிலத்தில் எடப்பாடி அரசு விரட்டியடிக்கப்பட்டு அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது-

    மக்களை ஒன்றினைப்பதற்காக மட்டுமே தி.மு.க. தலைமையில் இந்த கூட்டணி. மிக, மிக வலுவான கூட்டணி தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். மதசார்பின்மைக்கு இந்த கூட்டணியே சான்று. இந்தியா ஒன்றுமைக்கு நலன் பயக்கும் அனைவரையும் சகோதர்களாகவே பார்ப்போம். இந்தியாவை முன்னேற்றியதில் 10 ஆண்டுகாலத்தில் 7 ஆயிரம் கோடி விவசாய கடனை கலைஞர் தள்ளுபடி செய்தார். தேர்தல் நேரத்தில் 6000 வழங்குவது எந்த விதத்தில் பயன் அளிக்கும். இந்திய பொருளாதாரம் நலிவடைந்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. புதிய தொழிற்சாலை உருவாக இல்லை. வளர்ச்சியை உருவாக்க மோடி நடவடிக்கை எடுக்கவில்லை. செயல் திட்டம் என்பது மோடி , எடப்பாடி அரசுக்கு இல்லை. இட ஒதுக்கீட்டை அமல் படுத்தியவர் நேரு. தமிழகத்தில் இட ஒதுக்கீட்டை பெரியார் முன் எடுத்து சென்றார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், டி.ராஜா, சுதாகர் ரெட்டி, நல்லகண்ணு, தா. பாண்டியன், மனித நேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பேசினார். #DMK #MKStalin
    Next Story
    ×