search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது
    X

    அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

    அறந்தாங்கி பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    அறந்தாங்கி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிறப்பு இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் தலைமையில் போலீசார் நகரின் பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

    அப்போது அறந்தாங்கி ஆவுடையார் கோவில் ரெயில்வே கேட் அருகே கீரமங்கலம் பகுதியை சேர்ந்த பெரியதம்பி மனைவி செல்லம்மாள் (வயது 55) என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவர்  விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா, ரூ 1550 ரொக்கப் பணத் தையும் பறிமுதல் செய்தனர். 

    அதேப்போல வெள்ளாற்று கரையில் கஞ்சா விற்ற புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்த முருகேசன் (41) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, ரூ.7200 ரொக்கப் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×