என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்து நாசம்
Byமாலை மலர்26 Feb 2019 4:18 PM GMT (Updated: 26 Feb 2019 4:18 PM GMT)
கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நாசமாயின.
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X