search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புன்னம்சத்திரம் அருகே கள் விற்றவர் கைது
    X

    புன்னம்சத்திரம் அருகே கள் விற்றவர் கைது

    கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே கள் விற்றவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதி செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்தநிலையில் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே பெரியரங்கம்பாளையம் பகுதியில் தென்னை மரத்தில் இருந்து கள் இறக்குமதி செய்து விற்பதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதனை தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன் தலைமையில் போலீசார் பெரியரங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கள் விற்பனை நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது.

    பின்னர் அரசால் தடை செய்யப்பட் தென்னை கள் விற்பனை செய்த திருநாவுக்கரசு (49) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×