search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயம்
    X

    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயம்

    தேனி அருகே 10-ம் வகுப்பு மாணவி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள கோம்பை திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ். இவரது மகள் ரூபிகா (வயது15). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ரூபிகா தனது தந்தையிடம் கடைக்கு சென்று பேப்பர் வாங்கி வருவதாக கூறி சென்றார். வெகுநேரமாகியும் மகள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

    இதனால் மிகுந்த மனவேதனையடைந்த பெற்றோர் கோம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவி ரூபிகாவை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×