search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பைக் டாக்சிகள்.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பைக் டாக்சிகள்.

    கோவையில் அனுமதியின்றி இயங்கிய 40 பைக் டாக்சி பறிமுதல்

    கோவையில் அனுமதியின்றி இயங்கிய 40 பைக் டாக்சிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவையில் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆன்லைன் அழைப்பு அல்லது முன்பதிவு செய்தால் வீட்டிற்குகோ அல்லது இருக்கும் இடத்துக்கோ டாக்சி வந்து விடும். விரும்பிய இடங்களுக்கு சிரமம் இன்றி பயணிக்கலாம்.

    கால் டாக்சியை தொடர்ந்து பைக் டாச்சி விடப்பட்டது. இது பொதுமக்களுக்கு புதுமையாக தெரிந்தது. கால் டாச்சியை விட குறைந்த கட்டணமாகவும், குறுகிய சாலையில் எளிதில் சென்றுவர வசதியாகவும் இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் டாக்சி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அண்மையில் ஓலா- ரேபிடோ இணைந்து இயக்கும் பைக் டாச்சி குறித்து அறிவிப்பு வெளியானது. இது குறித்து அறிந்த சிலர் பைக் டாச்சிகள் உரிய அனுதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செயல்படுவதாக போக்குவரத்து இணை கமி‌ஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மத்திய போக்குவரத்து அதிகாரி பாஸ்கர் தலைமையில் இன்று வாகன சோதனை செய்யப்பட்டது.

    இதில் 40 பைக் டாச்சியை சோதனை செய்தபோது உரிய அனுமதியோ, ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 40 பைக் டாச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


    Next Story
    ×