என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் அனுமதியின்றி இயங்கிய 40 பைக் டாக்சி பறிமுதல்
Byமாலை மலர்26 Feb 2019 9:58 AM GMT (Updated: 26 Feb 2019 9:58 AM GMT)
கோவையில் அனுமதியின்றி இயங்கிய 40 பைக் டாக்சிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை:
கோவையில் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆன்லைன் அழைப்பு அல்லது முன்பதிவு செய்தால் வீட்டிற்குகோ அல்லது இருக்கும் இடத்துக்கோ டாக்சி வந்து விடும். விரும்பிய இடங்களுக்கு சிரமம் இன்றி பயணிக்கலாம்.
கால் டாக்சியை தொடர்ந்து பைக் டாச்சி விடப்பட்டது. இது பொதுமக்களுக்கு புதுமையாக தெரிந்தது. கால் டாச்சியை விட குறைந்த கட்டணமாகவும், குறுகிய சாலையில் எளிதில் சென்றுவர வசதியாகவும் இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் டாக்சி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அண்மையில் ஓலா- ரேபிடோ இணைந்து இயக்கும் பைக் டாச்சி குறித்து அறிவிப்பு வெளியானது. இது குறித்து அறிந்த சிலர் பைக் டாச்சிகள் உரிய அனுதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செயல்படுவதாக போக்குவரத்து இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மத்திய போக்குவரத்து அதிகாரி பாஸ்கர் தலைமையில் இன்று வாகன சோதனை செய்யப்பட்டது.
இதில் 40 பைக் டாச்சியை சோதனை செய்தபோது உரிய அனுமதியோ, ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 40 பைக் டாச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையில் பல்வேறு கால்டாக்சி நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஆன்லைன் அழைப்பு அல்லது முன்பதிவு செய்தால் வீட்டிற்குகோ அல்லது இருக்கும் இடத்துக்கோ டாக்சி வந்து விடும். விரும்பிய இடங்களுக்கு சிரமம் இன்றி பயணிக்கலாம்.
கால் டாக்சியை தொடர்ந்து பைக் டாச்சி விடப்பட்டது. இது பொதுமக்களுக்கு புதுமையாக தெரிந்தது. கால் டாச்சியை விட குறைந்த கட்டணமாகவும், குறுகிய சாலையில் எளிதில் சென்றுவர வசதியாகவும் இருந்தது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் டாக்சி உரிமையாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
அண்மையில் ஓலா- ரேபிடோ இணைந்து இயக்கும் பைக் டாச்சி குறித்து அறிவிப்பு வெளியானது. இது குறித்து அறிந்த சிலர் பைக் டாச்சிகள் உரிய அனுதியின்றியும், ஆவணங்கள் இன்றியும் செயல்படுவதாக போக்குவரத்து இணை கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மத்திய போக்குவரத்து அதிகாரி பாஸ்கர் தலைமையில் இன்று வாகன சோதனை செய்யப்பட்டது.
இதில் 40 பைக் டாச்சியை சோதனை செய்தபோது உரிய அனுமதியோ, ஆவணங்களோ இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து 40 பைக் டாச்சியையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X