search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்
    X

    பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடிப்பு- 18வது நாளாக பெருமாள் சிலை நிறுத்தம்

    பிரமாண்ட பெருமாள் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #PerumalStatue
    சூளகிரி:

    திருவண்ணாமலை மாவட்டம் கொரக்கோட்டையில், ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரமாண்ட பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனுமிடத்தில் பீடத்துடன் இணைத்து 108 அடி அகலம் கொண்ட பெருமாள் சிலையை ராட்சத லாரியில் ஏற்றிக்கொண்டு கடந்த டிசம்பர் மாதம் 7-ந் தேதி புறப்பட்டனர்.

    வழியில் பல்வேறு தடைகளை தாண்டி, ஜனவரி மாதம் 16-ந் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை வந்து அடைந்தது. அங்கிருந்து ஊத்தங் கரை, போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி வந்து கடந்த 9-ந் தேதி கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாம்பல்பள்ளம் என்னுமிடத்தை அடைந்தது.

    அங்குள்ள சிறு பாலத்தை கடப்பதில் சிக்கல் ஏற்பட்டடதால், பெருமாள் சிலையுடன் லாரி நிறுத்தப்பட்டது. அந்த பாலத்தை கடக்க தேசிய நெடுஞ்சாலைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை.

    இதனால், பாலத்தின் அருகே, புதியதாக தற்காலிக மண்சாலை அமைக்கும் பணி நடந்தது. இன்று 18-வது நாளாக சாம்பல்பள்ளம் பகுதியில் பெருமாள் சிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியை கடந்து விட்டால் சுமார் 2 கி.மீ. தொலைவில் சின்னாறு பாலம் உள்ளது. இதையடுத்து, சென்னப்பள்ளி மற்றும் கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் சிறு பாலங்கள் உள்ளன.

    இதற்காக வனத்துறை அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் சாம்பல்பள்ளத்தில் இருந்து புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தற்போது, தற்காலிக பாலம் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை முழுமை அடைந்தவுடன், பெருமாள் சிலை சிக்கல் இன்றி பெங்களூரு கொண்டு செல்ல முடியும்.

    இதனால் தான் சாம்பல் பள்ளத்தை கடப்பதற்கு கூடுதல் நாட்கள் பிடித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே சாம்பல் பள்ளம் மற்றும் மேலும் 2 இடங்களில் தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. #PerumalStatue 
    Next Story
    ×