என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்- ஆளுநர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்25 Feb 2019 10:31 AM GMT (Updated: 25 Feb 2019 10:31 AM GMT)
சென்னை அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். #BreakfastProgramme #BanwarilalPurohit
சென்னை:
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
முதலில் 1000 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்த 2 மாதங்களில் 5000 மாணவர்களுக்கும், வரும் கல்வியாண்டில் 20 ஆயிரம் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. #BreakfastProgramme #BanwarilalPurohit
அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதைப் போன்று காலை உணவு வழங்கவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதற்கட்டமாக சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் சென்னை மாநகராட்சியும் அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனமும் இணைந்து, மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைத்தார். திருவான்மியூர் அரசுப்பள்ளியில் இந்த திட்டத்தை ஆளுநர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், வி.சரோஜா, ஜெயவர்தன் எம்பி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X