என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளகோவிலில் கார்-டெம்போ மோதி கேபிள் டிவி ஆபரேட்டர் பலி
வெள்ளகோவில்:
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் அன்புராஜ்(65). கேபிள் டி.வி.ஆபரேட்டர். இவரது மனைவி ஞானமணி(60). இவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் ஒரு விஷேச வீட்டிற்கு காரில் சென்றனர். இவர்களுடன் அன்புராஜ் உறவினர் ஆறுமுகம் (70). அவரது மனைவி ஜெகதீஸ்வரி(62) ஆகியோரும் சென்றனர். இந்த கார் காங்கயம்-வெள்ளகோவில் சாலையில் எல்லை காட்டு வலசு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே டெம்போ வந்தது. திடீரென காரும் டெம்போவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் அன்புராஜ் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ஞானமணி, ஆறுமுகம், ஜெகதீஸ்வரி ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்