search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் கொள்ளையர் ஓட்டம்
    X

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் கொள்ளையர் ஓட்டம்

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலை பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் காஞ்சீபுரம் நகரப் பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் போதிய காவலர்கள் நியமிக்கப்படாததே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமான் மாவட்டத்தில் உள்ள வங்கி அலுவலர்களை அழைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். ஆனால் முழுமையான அளவில் ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படாததாலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என தெரிவித்தனர். #tamilnews
    Next Story
    ×