என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் கொள்ளையர் ஓட்டம்
Byமாலை மலர்23 Feb 2019 4:46 PM GMT (Updated: 23 Feb 2019 4:46 PM GMT)
காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ரெயில்வே சாலை பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் காஞ்சீபுரம் நகரப் பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் போதிய காவலர்கள் நியமிக்கப்படாததே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமான் மாவட்டத்தில் உள்ள வங்கி அலுவலர்களை அழைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். ஆனால் முழுமையான அளவில் ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படாததாலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என தெரிவித்தனர். #tamilnews
காஞ்சீபுரம் ரெயில்வே சாலை பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.
அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சீபுரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் காஞ்சீபுரம் நகரப் பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் போதிய காவலர்கள் நியமிக்கப்படாததே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமான் மாவட்டத்தில் உள்ள வங்கி அலுவலர்களை அழைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். ஆனால் முழுமையான அளவில் ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படாததாலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என தெரிவித்தனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X