search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலைகள் பறிமுதல்
    X

    ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு டன் பீடி இலைகள் பறிமுதல்

    ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 1 டன் பீடி இலைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் கடல் வழியாக இலங்கைக்கு போதைப்பொருட்கள் தங்கம் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதனை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்களுக்கு கடல் வழியாக பீடி இலைகள் இலங்கைக்கு கடத்தப்பட உள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அக்னி தீர்த்தக்கடல் பகுதியில் இருந்து ஓலைக் கூடா கடல் பகுதி வரை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சங்குமலை கடற்கரை பகுதியில் சென்றபோது 2 பேர் சந்தேகத்திற்கிடமாக நின்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பீடி இலைகளை இலங்கைக்கு கடத்த இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான 2 பேரும் தூத்துக்குடியைச் சேர்ந்த கார்த்திக், வேல் முருகன் என தெரியவந்தது. அவர்கள் யாருக்காக கடத்தினார்கள்? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #tamilnews
    Next Story
    ×