search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரவாண்டி அருகே கார் மோதி பெண் பலி
    X

    விக்கிரவாண்டி அருகே கார் மோதி பெண் பலி

    விக்கிரவாண்டி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த சித்தனி கிராமத்தை சேர்ந் தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது 55).

    சம்பவத்தன்று இவர் சித்தனியில் இருந்து விழுப்புரத்துக்கு செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பஸ்சுக்காக காத்திருந்த ஜெகதீஷ்வரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அக்கம் பக்கத்தினர் ஜெகதீஷ்வரியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ஜெகதீஷ்வரி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×