search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோஷ்டியூர் கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த பெண்- போலீசார் விசாரணை
    X

    திருக்கோஷ்டியூர் கோவில் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்த பெண்- போலீசார் விசாரணை

    கோவில் தெப்பத்தில் பிணமாக மிதந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் ஆலயம் உள்ளது. புகழ் பெற்ற இந்த ஆலயத்தில் கடந்த 19-ந் தேதி மாசி மகத்தெப்பத்திரு விழா நடந்தது.

    அதன் பின்னர் தினமும் தெப்பத்தில் பெண்கள் விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து விளக்கேற்றுகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் உடல், தெப்பக்குளத்தில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருக்கோஷ்டியூர் கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு அண்ணாத்துரை, திருக்கோஷ்டியூர் இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் பெண் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக மிதந்த பெண் யார்? அவவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×