search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை கொள்ளை
    X

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை கொள்ளை

    கீழ்ப்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கீழ்ப்பாக்கம் மில்லர்ஸ் ரோட்டில் வசித்து வருபவர் ராகுல் ஜெயின். ராஜஸ்தானை சேர்ந்த இவர் சென்னை அண்ணா சாலையில் ஆட்டோ மொபைல் கடை நடத்தி வருகிறார்.

    ராகுல் ஜெயின் தனது தங்கை திருமணத்துக்காக 71 பவுன் தங்க நகை, 120 கிராம் வைர நகைகளை வாங்கினார். ரூ.25 லட்சம் மதிப்புள்ள அந்த நகைகளை ஒரு சூட்கேசில் வைத்திருந்தார்.

    ராஜஸ்தானில் நடந்த தங்கை திருமணத்துக்காக நகைகள் வைக்கப்பட்டிருந்த சூட்கேசை எடுத்து சென்றார். அங்கு சூட்கேசை திறந்து பார்த்தபோது நகைகள் மாயமாகி இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் ஜெயின் சென்னை வந்து கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், “சூட்கேசில் நகைகளை வைத்தது வீட்டு வேலைக்காரர்களுக்கு தெரியும் என்றும், அவர்கள் மீது சந்தேகம் உள்ளது” என்றும் தெரிவித்து இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்கிறார்கள்.

    Next Story
    ×