என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளை
Byமாலை மலர்23 Feb 2019 6:21 AM GMT (Updated: 23 Feb 2019 6:21 AM GMT)
மீஞ்சூர் அடுக்கு மாடி குடியிருப்பில் 3 வீடுகளில் நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நந்தியம் பாக்கம் ரெயில் நிலையம் அருகில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இங்கு 10 வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு வீட்டில் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வேலை செய்யும் பிரபல் குடியிருக்கிறார். இன்னொரு வீட்டில் வட சென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர் வினோத் குடும்பத்துடன் வசிக்கிறார். மற்றொரு வீட்டில் தேவிகா (65) குடியிருக்கிறார்.
நேற்று 3 வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு பிரபல் வீட்டில் 50 ஆயிரம் பணம், 2 சவரன் நகை, வினோத் வீட்டில் 5 ஆயிரம் பணம், 1 சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்கள், தேவிகா வீட்டில் அரை கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மற்ற 7 வீடுகளில் வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு கொள்ளை அடித்துள்ளனர்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X