என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் ஆயுர்வேத மருத்துவமனை ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படும்- நாராயணசாமி அறிவிப்பு
Byமாலை மலர்22 Feb 2019 2:49 PM GMT (Updated: 22 Feb 2019 2:49 PM GMT)
வில்லியனூரில் ஆயுர்வேத மருத்துவமனை இன்னும் ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வில்லியனூர்:
மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ் வில்லியனூர் தீயணைப்பு நிலையம் அருகே ரூ.7 கோடியே 93 லட்சம் செலவில் ஆயுர் வேத மருத்துவமனை கட்டப்படுகிறது. இப்பணிக்கான பூமி பூஜை விழா இன்று காலை நடைபெறுகிறது. விழாவில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
தற்போது கிராம பகுதி மக்கள் அலோபதி மருத்துவம் மட்டுமல்லாமல் ஆயுர்வேதிக் மருத்துவத்தையும் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக நமது அரசு மத்திய அரசின் ஒப்புதலுடன் ரூ.8 கோடி செலவில் வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை அமைக்கப்படுகிறது.
இது, வில்லியனூர் பகுதி மட்டும் அல்லாமல் மங்கலம், திருபுவனை, மண்ணாடிப்பட்டு, உழவர் கரை போன்ற தொகுதிகளை சேர்ந்த மக்களும் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக இந்த மருத்துவமனை அடிக்கல் நாட்டப்படுகிறது. கிராம பகுதி மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக இந்த மருத்துவமனை கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுவதுடன் மருந்து- மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படும். இன்னும் ஒரு ஆண்டுக்குள் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், இந்திய மருத்துவ முறை ஆயுர்வேதிக் இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சாமிநாதன், கண்காணிப்பு பொறியாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X