என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
விருதுநகரில் வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கிய என்ஜினீயரிங் மாணவர் பலி
விருதுநகர்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லவன்கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 22). இவர் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
நேற்று விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு யோகேஸ்வரன் வந்தார். பின்னர் மாலையில் ரெயில் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது திண்டுக்கல் செல்லும் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குருவாயூர் சென்ற ரெயிலில் யோகேஸ்வரன் தவறுதலாக ஏறிவிட்டார். இதையறிந்த யோகேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கினார். இதில் அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள், யோகேஸ்வரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே யோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்