என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி
Byமாலை மலர்21 Feb 2019 5:48 PM GMT (Updated: 21 Feb 2019 5:48 PM GMT)
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 82). இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் இறவாங்குடி கடைவீதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிவலிங்கம் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சிவலிங்கம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவலிங்கம் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவலிங்கம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரை தேடி வருகின்றார்.
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள இறவாங்குடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 82). இவர் கடந்த 18-ந்தேதி காலை தனது வீட்டில் இருந்து சைக்கிளில் இறவாங்குடி கடைவீதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சிவலிங்கம் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள், சிவலிங்கம் ஓட்டி வந்த சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த சிவலிங்கம் படுகாயமடைந்தார்.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவலிங்கம் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமாரை தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X